கொடைக்கானல்: கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைத்து தர கோரிக்கை எழுந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மூஞ்சிக்கல் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வந்தது. நகராட்சி சார்பில் பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த நிழற்குடை, சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின்போது இடித்து அகற்றப்பட்டது. இதன் காரணமாக இங்கு பஸ் ஏற வரும் பொதுமக்கள் திறந்தவெளியில் வெயில் மற்றும் மழையில் காத்திருக்கின்றனர்.
இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். ெபாதுமக்கள் நலன் கருதி, இப்பகுதியில் உடனடியாக நிழற்குடை அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.