×

கோவையில் பக்கெட்டில் விளையாடிய குழந்தை நீரில் மூழ்கி சாவு

கோவை, : கோவை தொண்டாமுத்தூர் யுவராஜ் கார்டன் பகுதியை சேர்ந்தவர் அபுல் உசேன் (26). இவரது மனைவி தசீனா (24). அசாம் ரூபாலி மாவட்டத்தை பூர்வீகமாக ெகாண்ட இவர்கள் கடந்த 3 ஆண்டாக தொண்டாமுத்தூர் பகுதியில் பாக்கு தோட்டத்தில் வேலை செய்து வந்தனர். இவர்களுக்கு 3 வயது பெண் குழந்தை மற்றும் 9 மாதத்தில் தகோளம் என்ற ஆண் குழந்தை உள்ளனர். இந்நிலையில், அபுல் உசேன் கூலி பணத்தை தராமல் தான் மட்டும் செலவு செய்வதாக மனைவி தசீனா நள்ளிரவு வரை தகராறு செய்துள்ளார்.

பின்னர் அனைவரும் தூங்கி விட்டனர். அதிகாலையில் அபுல் உசேன் பாக்கு பறிக்க சென்று விட்ட நிலையில், காலையில் தாமதமாக எழுந்த தசீனா தனது அருகே படுத்திருந்த ஆண் குழந்தையை தேடிபோது காணவில்லை.
வீட்டிற்கு வெளியே பிளாஸ்டிக் தண்ணீர் பக்கெட்டை பார்த்தபோது அதில் குழந்தை தகோளம் இறந்த நிலையில் கிடந்தான். தவழ்ந்து சென்று பக்கெட் தண்ணீரில் விளையாடிய குழந்தை அதில் தலைகீழாக விழுந்து மூச்சு திணறி இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து தொண்டாமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Coimbatore , Cove, bucket, child, death
× RELATED பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் மைவி3...