சென்னை: புதுச்சேரியில் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கை கடுமையாக்க உத்தரவிடக் கோரி ஐகோர்ட்டில் மனு அளிக்கப்பட்டுள்ளது. புதுவையில் மரணங்கள் அதிகரித்து வருவதால் ஊரடங்கை கடுமையாக்க கோரி சம்பத் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். கொரோனா ஊரடங்கை கடுமையாக்குவது குறித்து புதுவை அரசே முடிவெடுக்க வேண்டும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.