×

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: சிஆர்பிஎஃப் வீரர் காயம்; பெண் ஒருவர் பலி.!!!

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பேட்மாலூ பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக நேற்று  நள்ளிரவில்  பாதுகாப்புபடையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, ஜம்மு-காஷ்மீர் போலீஸ் மற்றும் சிஆர்பிஎஃப் ஆகியவற்றின் கூட்டுக்குழு இப்பகுதியில் சுற்றிவளைத்து தேடுதல் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

தொடர்ந்து, இன்று காலை பயங்கரவாதிகள் மறைந்திருந்த வீட்டை கூட்டுக்குழு சுற்றி வளைத்த நிலையில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த மோதலில் மூன்று பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டனர்.  இந்த மோதலில் சிஆர்பிஎஃப் துணை கமாண்டன்ட் ஒருவர் காயமடைந்தார், இரு தரப்புக்கும் நடந்த மோதலில் அந்த பகுதியை சேர்ந்த பெண் ஒருவரும் உயிரிழந்தார். பாதுகாப்பு படையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்த பயங்கரவாதிகளின்  அடையாளம் இன்னும் வெளியிடவில்லை. இருப்பினும், தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேட்டியளித்த ஜம்மு-காஷ்மீர் ஐஜி விஜயகுமார்,  இந்த தாக்குதலில் ஒரு அடையாளம் தெரியாத பயங்கரவாதி கொல்லப்பட்டுள்ளார். சிஆர்பிஎஃப் துணைத் தளபதியும் புல்லட் காயம் பெற்று சிகிச்சைக்காக  இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த மோதலின்போது கவுசர் என்ற பெண்மணி தோட்டாவால் தாக்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். ஆனால் அவர் பலத்த காயமடைந்து உயிரிழந்தார்  என்று தெரிவித்தார்.

Tags : terrorists ,security forces ,soldier ,Kashmir ,Jammu ,CRPF , Three terrorists shot dead by security forces in Jammu and Kashmir: CRPF soldier injured; A woman is killed !!!
× RELATED ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில்...