×

சென்னிமலை அருகே கொடுமணல் அகழாய்வில் முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு

சென்னிமலை: சென்னிமலை அருகே நடந்து வரும் அகழாய்வு பணியில் பெரிய அளவிலான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. தாழிக்குள் இருந்த எலும்புகள் ஆய்வுக்காக மதுரை கொண்டு செல்லப்பட்டன. ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே கொடுமணல் கிராமத்தில் 2300 ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இருந்ததால், பல்வேறு கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. தற்போது இந்திய தொல்லியல் துறையின் திட்ட இயக்குநர் ரஞ்சித் தலைமையில் உதவி தொல்லியலாளர் நந்தகுமார், தொல்லியல் வல்லுநர் சுப்பிரமணியம் ஆகியோர் மேற்பார்வையில் கொடுமணல் பகுதியில் கடந்த 4 மாதங்களாக அகழாய்வு பணி நடந்து வருகிறது.

இந்த அகழாய்வு பணியில் அணிகலன்கள் தயார் செய்த தொழிற்சாலைகளும், வெள்ளி மற்றும் செம்பு நாணயங்கள், சூது பவள கல்மணிகள், வாள், சிறிய கத்திகள், மண் குவளை, மண் ஜாடிகள் உள்பட ஏராளமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. தற்போது கல்லறைகள் இருந்த பகுதியில் ஆய்வு செய்தபோது பெரிய அளவிலான மூன்று முதுமக்கள் தாழிகள் மண்ணில் புதைந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டன.

கடந்த 15ம் தேதி முதுமக்கள் தாழியில் ஒன்றை புதுச்சேரி பல்கலைக்கழக ஓய்வு பெற்ற பேராசிரியர் ராஜன் தலைமையில், கீழடி அகழாய்வு துறையின் துணை இயக்குநர் சிவானந்தம் மற்றும் கீழடி அகழாய்வாளர் பாஸ்கர் ஆகியோர் ஆய்வு செய்தனர். அந்த மண் நிரம்பி கிடந்த அந்த முதுமக்கள் தாழியில் மனிதனின் உடைந்த மண்டை ஓடுகள் மற்றும் கை, கால் எலும்புகள் ஆகியவை இருந்தன. இதில் சில மாதிரிகளை டி.என்.ஏ. பரிசோதனைக்காக ஆய்வுக்குழுவினர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆய்வு கூடத்திற்கு மிகவும் பத்திரமாக எடுத்து சென்றனர்.

அந்த ஆய்வில் பானைக்குள் இருந்த எலும்புகள் யாரோடு தொடர்புடையது என்பதை கண்டுபிடிக்க உதவும் என ஆய்வுக்குழுவினர் தெரிவித்தனர். தற்போதைய ஆய்வில் செங்கற்கள் மூலம் கட்டமைக்கப்பட்ட தொழிற்கூடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்மணிகளும், பிராமி எழுத்துக்களையும் கண்டுபிடித்துள்ளனர். இந்த அகழாய்வு பணி வருகிற 30ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது என இந்திய தொல்லியல் துறையின் திb1ட்ட இயக்குநர் ரஞ்சித் தெரிவித்தார்.

Tags : miners ,Kodumanal ,Chennimalai , Chennimalai, minions, invention
× RELATED தைவானில் பயங்கர நிலநடுக்கம்; 9 பேர் பலி;...