×

வேளச்சேரி அருகே ஆன்லைன் வகுப்பின்போது மாணவன் திடீர் தற்கொலை

வேளச்சேரி: மேடவாக்கம் புஷ்பா நகர் வினோத் தெருவை சேர்ந்தவர் செல்வம். தனியார் நிறுவன ஊழியர். இவரது மகன் கார்த்திக் (14). செம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில், நேற்று மதியம் கார்த்திக்குக்கு ஆன்லைன் வகுப்பு நடந்தது. அப்போது, அவனது பெற்றோர் வெளியே சென்றிருந்தனர். கார்த்திக் மட்டும் தனியே வீட்டில் இருந்து ஆன்லைன் வகுப்பில் படித்தான். பின்னர் பெற்றோர் மாலை வீடு திரும்பியபோது, கதவு உள்பக்கம் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது.

நீண்ட நேரம் கதவை தட்டியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்து ஜன்னல் வழியே எட்டி பார்த்தனர். அப்போது, கார்த்திக் தூக்கில் பிணமாக தொங்கினான். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சம்பவம் குறித்து பள்ளிக்கரணை காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மாணவன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவன்  ஆன்லைன் வகுப்புக்கு பயன்படுத்திய செல்போனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Student ,suicide ,class ,Velachery , Student commits suicide during online class near Velachery
× RELATED கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய...