சென்னை : ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை அரசுடைமையாக்கியதற்கான சட்ட மசோதா இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. ஏற்கனவே அவசர சட்டம் மூலம் அரசுடைமையாக்கப்பட்ட நிலையில், சட்டப்பேரவையில் இன்று மசோதா தாக்கல் செய்யப்படுகிறது.சென்னை கலைவாணர் அரங்கில் செப்டம்பர் 14 ஆம் தேதி கூடிய தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவுபெறுகிறது.