×

தனியார் பஸ் சேவை தொடங்கியது

சென்னை: தமிழகத்தில் தனியார் பேருந்துகள் நேற்று முதல் இயங்கத் தொடங்கியது. தமிழக அரசு சார்பில் 7ம் தேதி முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல விரைவு பேருந்து சேவை தொடங்கப்பட்டது. மேலும், தனியார் பேருந்து சேவையையும் தொடங்க அரசு உத்தரவிட்டது. ஆனால், வரி விலக்கு அளிக்க தனியார் பேருந்து உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதன் மீது நடவடிக்கை எடுக்காததால் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இந்தநிலையில், தமிழகத்தில் நேற்று முதல் தனியார் பேருந்து சேவை இயக்கம் தொடங்கியுள்ளது.

இதுகுறித்து, தனியார் பேருந்துகள் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலர் தர்மராஜ் கூறியதாவது:
தமிழகத்தில் தனியார் பேருந்து இயக்கம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் நடத்தப்பட்டது. இதில், தமிழகத்தில் பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நேற்று முதல் தமிழகத்தில் பேருந்து சேவை தொடங்கியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் தனியார் பேருந்துகள் நேற்று இயங்கத் தொடங்கின. இதேபோல் திருச்சி, திருநெல்வேலி என படிப்படியாக அனைத்து வழித்தடங்களிலும் பேருந்துகள் இயங்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Private bus service started
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...