×

டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரனுக்கு கொரோனா

சென்னை: தமிழகத்தில் கொரோனாவுக்கு பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தினமும் 5 ஆயிரத்தை தாண்டி  வருகிறது. இதில் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள், அரசு ஊழியர்கள் நிறைய பேர் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர். அதேபோல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்ஸ்சுகள், சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், போலீசார், தீயணை ப்புத்துறையினர் என பல தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) தலைவர் பாலச்சந்திரனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதேபோல, அவரது மனைவி மற்றும் மகளுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags : Balachandran ,Corona ,DNPSC , Corona to DNPSC President Balachandran
× RELATED கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் மக்களுக்கு வழங்க வேண்டும்