×

68 பேர் மரணம் தமிழகத்தில் ஒரே நாளில் 5,697 பேருக்கு கொரோனா

சென்னை: தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் நேற்று 5697 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 14 ஆயிரத்து 208 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 68 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் 12 பேர், சேலத்தில் 9 பேர், கடலூர், திருவள்ளூரில் தலா 5 பேர், செங்கல்பட்டு மற்றும் கோவையில் தலா 4 பேர், தென்காசி, தேனி, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் தலா 3 பேர், கன்னியாகுமரி, மதுரை, தஞ்சாவூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேர், திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, நாகை, புதுக்கோட்டை, திருப்பூர், திருச்சி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் என்று மொத்தம் 68 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதில் 8 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு மட்டும் மரணம் அடைந்துள்ளனர். 60 பேர் இணை நோய்களுடன் கொரோனா பாதிக்கப்பட்டு மரணம் அடைந்துள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8502 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : deaths ,Corona ,Tamil Nadu , 68 deaths in Tamil Nadu Corona to 5,697 people in a single day
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...