×

தமிழகத்தின் 6 மாவட்டங்களில் கனமழை

சென்னை: வங்கக் கடலில் உருவான காற்றழுத்தம் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக வால்பாறையில் 30மிமீ மழை பெய்துள்ளது. சோத்துப்பாறை, ஆத்தூர் 20மிமீ மழை பெய்துள்ளது. இந்நிலையில், ஆந்திரா மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அதே இடத்தில் நீடித்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சேலம், நாமக்கல், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கோவை, வேலூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். இது தவிர, வேலூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை  பெய்யும். சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யும்.

Tags : districts ,Tamil Nadu , Heavy rain in 6 districts of Tamil Nadu
× RELATED தமிழ்நாட்டில் நேற்று 16 மாவட்டங்களில்...