டெல்லி: தகுதியற்ற நபர்களுக்கு வழங்கப்பட்ட உழவர் உதவி நிதி ரூ.47 கோடி மீட்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சிபிசிஐடி போலீஸ் 10 வழக்குகள் பதிவு செய்து 16 பேரை கைது செய்துள்ளது. இதுவரை ஒப்பந்த ஊழியர்கள் 19 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வட்டார வேளாண் உதவி இயக்குனர்கள் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கணினி கடவுச் சொற்களை திருடி சிலர் மோசடியில் ஈடுபட்டு உள்ளனர் எனவும் நரேந்திர சிங் தோமர் தகவல் தெரிவித்துள்ளது.