×

தா.பழூர் அருகே வேகத்தடையே அமைக்காமல் அமைத்ததாக பதாகை வைப்பு: வாகன ஓட்டிகள் ஏமாற்றம்

தா.பழூர்: தா.பழூர் அருகே வேகத்தடையே அமைக்காமல் அமைத்ததாக பதாகை வைக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் ஏமாற்றமடைந்தனர். அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள அணைக்குடத்துக்கு அருகில் பொற்பதிந்தநல்லூர் செல்லும் சாலை உள்ளது. அதன் உள்கிராமங்களில் இருந்து மக்கள் தா.பழூர் மற்றும் ஜெயங்கொண்டம் செல்ல ஜெயங்கொண்டம்- கும்பகோணம் சாலையை பயன்படுத்த வேண்டியுள்ளது. உள் கிராம பகுதியில் இருந்து வருபவர்கள் ஜெயங்கொண்டம்- கும்பகோணம் சாலையை கடக்கும்போது விபத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

எனவே அப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் வேகத்தடை அமைக்கப்படாமலேயே வேகத்தடை அமைத்ததாக பதாகைகள் உள்ளது. இந்த பகுதியில் திருமண மண்டபங்கள் இருப்பதால் ஜெயங்கொண்டம் மற்றும் கும்பகோணம் பிரிவு சாலையிலும் வேகத்தடை அமைக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆனால் வேகத்தடை அமைக்காமலேயே வேகத்தடை அமைத்ததாக பதாகைகள் வைக்கப்பட்டிருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் ஏமாற்றத்துக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் இரு சாலைகள் சந்திப்பு என்பதாலும் ஜெயங்கொண்டம்- கும்பகோணம் சாலையில் போக்குவரத்து வாகனங்கள் வேகமாக செல்வதாலும் அதிகளவில் விபத்துகள் நடக்கிறது. எனவே விரைந்து வேகத்தடை அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : speed limit ,Dhaka ,Motorists , Speed Breaker, banner
× RELATED பிரதமர் அடிக்கல் நாட்டியும்...