டெல்லி: 2020 ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை மாநில அரசுகளுக்கு வழங்க போதிய நிதியில்லை என்று மத்திய அரசு சார்பில் மாநிலங்களவையில் வழங்கப்பட்ட எழுத்துப்பூர்வ பதிவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி வசூல் குறைவாக இருப்பதால் தற்போது இழப்பீட்டு தொகையை கொடுக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.