×

டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பாலச்சந்திரன், மனைவி மற்றும் மகளுக்கு கொரோனா தொற்று உறுதி: மருத்துவனையில் அனுமதி

சென்னை: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பாலச்சந்திரன், மனைவி மற்றும் மகளுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் பொதுமக்கள் மட்டுமின்றி கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் அமைச்சர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை தொற்று பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகளும், தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், போலீசார், தீயணைப்புத்துறையினர் என பலதரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பாலச்சந்திரன், மனைவி மற்றும் மகளுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்த டி.என்.பி.எஸ்.சி. தலைவர் மற்றும் குடும்பத்தினர் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags : Balachandran ,DNPSC , DNPSC, Chairman, Balachandran, Wife, Daughter, Corona
× RELATED வல்லவன் வகுத்ததடா படத்தில் 5 பேரின் ஹைப்பர்-லிங்க் கதை