×

கும்பகோணத்தை புதிய மாவட்டமாக சட்டமன்ற கூட்டத்தில் அறிவிக்கப்பட வேண்டும்!!.. மகாமக குளத்தை சுற்றி மனிதசங்கிலி போராட்டம்!!!

தஞ்சாவூர்:  கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வலியுறுத்தி மனிதசங்கிலி போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கும்பகோணம் மகாமக குளத்தை சுற்றி 500க்கும் மேற்பட்டோர் மனிதசங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை இப்பகுதி மக்களிடையே சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்நிலையில் சமீப காலமாக இந்த கோரிக்கை மிக வலுவடைந்து பொதுமக்கள் பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதனையடுத்து தற்போது இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று கும்பகோணம் மகாமக குளத்தை சுற்றி 500க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் ஒன்றிணைந்து மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கையில் பல்வேறு வாசகங்கள் அடங்கிய சீட்டுகளை வைத்து கொண்டு போராடி வருகின்றனர். அவற்றில், என்ன தகுதி இல்லை கும்பகோணத்திற்கு..! மாவட்டமாக்கு மாவட்டமாக்கு கும்பகோணத்தை மாவட்டமாக்கு...!! , சோழர் காலத்தில் தலைநகரமாக விளங்கிய கும்பகோண பகுதியை மாவட்டமாக்கு..! நடைபெறுகிற சட்டமன்ற கூட்டத்தில் கும்பகோணத்தை மாவட்டமாக அறிவிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு பொதுமக்களும், பல்வேறு அரசியல் கட்சிகளும் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதி முழுவதும் ஒரு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

Tags : Kumbakonam ,assembly meeting ,district ,pond ,Mahamaka ,Human chain protest , Kumbakonam to be declared a new district
× RELATED அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து; ஒருவர் பலி: 25க்கும் மேற்பட்டோர் காயம்!!