சென்னை: சென்னை காவல்துறை தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் தினகரன் பெயரில் போலி ஃபேஸ்புக் கணக்கு என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு உதவ பணம் தேவை என கூறி போலி ஃபேஸ்புக் கணக்கில் பண மோசடி நடந்துள்ளதாக புகார் கூறியுள்ளனர். கூடுதல் காவல் ஆணையர் தினகரன் புகாரின் பேரில் கீழ்ப்பாக்கம் சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.