டெல்லி : இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 49,30,237 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமாக கொரோனாவுக்கு 80,776 பேர் பலி ஆகியுள்ளார். இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 38,59,400 ஆக அதிகரித்துள்ளது. 9,90,061 பேர் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை இல்லாத புதிய உச்சமாக இந்தியாவில் ஒரே நாளில் 83,809 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,054 பேர் பலியாகி உள்ளனர்.