×

நிர்வாண கோலத்தில் நின்றபடி பெண்களிடம் ஆபாச சைகை: ஆசாமியை பிடித்து விசாரணை

அண்ணாநகர்: திருமங்கலம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. நேற்று முன்தினம் மாலை இந்த குடியிருப்பின் மொட்டை மாடியில் ஒரு நபர் நிர்வாணமாக நடமாடியதுடன், அங்கு குடியிருக்கும் பெண்களிடம் ஆபாச சைகையில் ஈடுபட்டார். இதனால், அதிர்ச்சியடைந்த பெண்கள் இதுபற்றி காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், திருமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மொட்டை மாடியில் நிர்வாண நிலையில் நின்ற நபரை மடக்கி பிடித்தனர். அப்போது, அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் நடந்து கொண்டார். இதையடுத்து, அவருக்கு ஆடை அணிவித்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். அதில், அவர் அதே குடியிருப்பில் வசிக்கும் மதுரையை சேர்ந்த ராஜேந்திரன் (42) என்பதும், மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரிந்தது. அவரை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Tags : women ,Asami , Nude kolam, standing, women, porn gesture, asami, interrogation
× RELATED மதுரையில் மீனாட்சியம்மன்...