×

இறைச்சி கடையில் ஆடு, கோழி திருட்டு: 2 பேர் கைது

பூந்தமல்லி: திருவேற்காடு அடுத்த மேல் அயனம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஜலால்(27). அதே பகுதியில் இறைச்சிக் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் இவர் கடைக்குள் 4 ஆடுகள் மற்றும் 15 கோழிகளை வைத்து பூட்டி விட்டு சென்றார். இந்நிலையில், நேற்று காலை வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த ஆடு மற்றும் கோழிகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து, திருவேற்காடு போலீசில் அவர் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக, பொன்னேரியை சேர்ந்த அஜய்(23). அஜித் (22) ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 4 ஆடுகள், 15 கோழிகள் மற்றும் கார் ஆகியவற்றை  பறிமுதல் செய்தனர்.


Tags : butcher shop , Butcher shop, goat, chicken theft, 2 people, arrested
× RELATED ஆலங்குடி அருகே இறைச்சிகடையில்...