×

மத்திய கூட்டுறவு வங்கியில் வியாபாரிகளுக்கு கடனுதவி

உத்திரமேரூர்: உத்திரமேரூரில் இயங்கும் காஞ்சி மத்திய கூட்டுறவு வங்கியில், கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 9 சிறு, குறு வியாபாரிகளுக்கு ரூ.11 லட்சம் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. காஞ்சி மத்திய கூட்டுறவு சங்கத் தலைவர் வாலாஜாபாத் கணேசன் கலந்து கொண்டு, 9 வியாபாரிகளுக்கு ரூ.11 லட்சத்துக்கான கடனுதவிகளை வழங்கினார். மேலும் கொரோனா காலத்தில் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தி முக கவசங்கள் வழங்கப்பட்டன. காஞ்சி மத்திய கூட்டுறவு வங்கி மேளாளர் விமல்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : merchants ,Central Cooperative Bank , Credit to merchants in the Central Cooperative Bank
× RELATED வணிகர் சங்கங்களின் பேரமைப்பு...