×

காஞ்சி வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் சட்டமன்றத் தேர்தலை சந்திக்க ஊராட்சி வாரியாக செயல்வீரர்கள் கூட்டம்: மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் தகவல்

காஞ்சிபுரம்: காஞ்சி வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நடந்தது. இதில், சட்டமன்றத் தேர்தலை சந்திக்க ஊராட்சி வாரியாக செயல்வீரர்கள் கூட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் தெரிவித்ததாவது. நடந்து முடிந்த திமுக பொதுக்குழுவில் பொதுக்குழு உறுப்பினர்களின் நல்லாதரவோடு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய பொதுச் செயலாளர் துரைமுருகன், புதிய பொருளாளர் டி.ஆர்.பாலு ஆகியோருக்கும், துணைப் பொதுச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள க.பொன்முடி, ஆ.இராசா ஆகியோருக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்.

அண்ணா 112வது பிறந்த நாளான 15ம் தேதி (இன்று) மாவட்டத்தின் அனைத்து கொடி கம்பங்களிலும் திமுக கொடியேற்றி, மிக சிறப்பான கொண்டாட முடிவெடுக்கப்பட்டுள்ளது. தந்தை பெரியார் பிறந்தநாளான 17ம் தேதி காலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பெரியார் சிலைக்கும், உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்படும். 2021 சட்டமன்றத் தேர்தலை எதிர் கொள்ள, முதல் கட்டமாக ஒன்றியங்களில் உள்ள புதிய கிளைகளை இணைத்து ஊராட்சிகள் வாரியாக செயல்வீரர்கள் கூட்டம் நடத்தி தேர்தல் பணிகளை முடுக்கி விடுவது, திருப்போரூர் வடக்கு - தெற்கு ஒன்றியங்களில் வரும் 17ம் தேதி செயல்வீரர்கள் கூட்டத்தினை தொடங்கி, மாவட்டம் முழுவதும், அனைத்து ஒன்றியங்களிலும் வெற்றிகரமாக கூட்டம் நடத்தி, தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபடுவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

Tags : Kanchi North District ,Activists ,Panchayat ,DMK ,District Secretary ,Executive Committee Meeting ,Assembly Elections , Kanchi North District, DMK Executive Committee Meeting Panchayat wise Activists Meeting to Meet the Assembly Elections: District Secretary Thamo Anparasan Information
× RELATED வாக்களிக்க பணம் தர இருப்பதாக புகார் ஊராட்சி மன்ற தலைவி வீட்டில் ரெய்டு