×

கொரோனா விதிமுறைகளை மீறியவர்களிடம் 13 லட்சம் அபராதம் வசூல்: சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி

சென்னை: கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனைத் தொடர்ந்து கொரோனா நோய்க் கட்டுப்பாட்டு  விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கும் அவசர சட்டத்துக்கு கடந்த வாரம் தமிழக ஆளுநர் அனுமதி அளித்தார். இதன்படி தனிமைப்படுத்துதலை மீறுபவர்களுக்கு 500, மாஸ்க் அணியாதவர்களுக்கு 200, பொது இடங்களில் எச்சில் துப்புவோருக்கு ₹500, தனிமனித  இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு 500, நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு 5 ஆயிரம், கட்டுப்படுத்தப்பட்ட பகுதி  நெறிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு 500 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதன்படி புதிய அபராத் தொகை வசூலிக்கும் நடைமுறை கடந்த 9ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இது குறித்து சுகாதாரத்துறை செயலாளர்  ராதாகிருஷ்ணன் கூறியதாவது, ‘ தொற்றுநோய் சட்டத்தின் கீழ் முகக்கவசம் அணியாத, சமூக இடைவெளியை பின்பற்றாத, கொரோனா  விதிமுறைகளை மீறிய நபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து இதுவரை 13.39 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.  இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Health Secretary , 13 lakh fines collected for violating corona rules: Interview with Health Secretary
× RELATED வேளச்சேரி ஏ.ஜி.எஸ். காலனி பகுதியில்...