மதுரை: மணல் கடத்தலை தடுக்கக் கோரும் வழக்கு விசாரணையின் போது ஐகோர்ட் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. மணல் கடத்தல் பிரச்சனையில் லஞ்ச ஒழிப்புத்துறை என்ன செய்கிறது என நீதிபதி கேள்வி எழுப்பினார். கிராமநிர்வாக அதிகாரிகள், மின்துறை போன்ற அதிகாரிகள் மீதே லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்கிறது என கூறினார். டாஸ்மாக் மது விற்பனை போல் மணல் விற்பனையை அரசே ஏற்றால் வருமானம் அமோகமாக இருக்கும் என நீதிபதி கூறினார்.