×

சென்னை தியாகராய நகரில் உள்ள சிந்தாமணி கூட்டுறவு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தீ விபத்து: 3 ஊழியர்கள் காயம்

சென்னை: சென்னை தியாகராய நகரில் உள்ள சிந்தாமணி கூட்டுறவு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பழைய பெட்ரோல் சேமிப்புக் கலனை மாற்றும் பணியின் போது ஏற்பட்ட தீ விபத்தில் 3 ஊழியர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். சென்னை பனகல் பார்க் பகுதியில் உள்ள சிந்தாமணி கூட்டுறவு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் இருந்த பழைய பெட்ரோல் டாங்கை மாற்றும் பணி இன்று நடைபெற்றது. அப்போது வேறு பங்கிலிருந்து பெட்ரோலை கொண்டு வந்து டாங்கில் நிரப்பும்போது திடீரென பெட்ரோல் எறிய தொடங்கியுள்ளது.

இதில் 3 பேர் தீக்காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்னர். திருவான்மியூரைச் சேர்ந்த குமார்(45) ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்த சேகர்(35) மற்றும் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அதில் ஒருவருக்கு தீ காயம் அதிகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே பாண்டி பஜாரில் இருந்த தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Thiyagaraya ,Chintamani Co-operative Petrol Station ,Chennai , Fire at Chintamani Co-operative Petrol Station in Thiyagaraya, Chennai: 3 employees injured
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...