சென்னை: நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வலியுறுத்தி மக்கள் பாதை அமைப்பினர் தொடர் உண்ணாவிரதம் தொடங்கியுள்ளனர். நீட் தேர்வால் ஏற்பட்ட மரணங்களுக்கு நியாயம் கேட்டு உண்ணாவிரதத்தை மக்கள் பாதை அமைப்பினர் தொடங்கினர். மேலும் நீட்டுக்கு எதிராக மக்கள், மாணவர்கள் 25 லட்சம் பேரின் கையெழுத்து அடங்கிய மனுவை அரசுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளனர்.