×

பிரதமர் மோடி மயில்களுடன் பிஸியாக இருப்பதால், நம்மை நாம்தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் : ராகுல் காந்தி பாய்ச்சல்!!

டெல்லி : பிரதமர் மோடி மயில்களுடன் பிஸியாக இருப்பதால், நம்மை நாம்தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. நீட் தேர்வு விவகாரம், கொரோனா ஊரடங்கால் நாட்டில் ஏற்பட்டுள்ள சுகாதார, பொருளாதாரத் தாக்கம், சீனா உடனான எல்லைப் பிரச்சனை ஆகியவை இக்கூட்டத் தொடரில் முக்கியப் பிரச்சினைகளாக எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே கொரோனா பரவலை தடுப்பதில் தோல்வி, சீனாவுடனான எல்லைப் பிரச்சனை தொடர்பாக அவ்வப்போது மத்திய அரசின் நடவடிக்கைகளை ராகுல் காந்தி விமர்சனம் செய்து வருகின்றனர்.   

அந்த வரிசையில், ராகுல் காந்தி இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,இந்த வாரம் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டடோரின் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்துவிடும், 1 கோடி நோயாளிகள் சிகிச்சையில் இருப்பார்கள். தனிமனிதரின் ஈகோ வை பாதுகாக்க அமல்படுத்தப்பட்ட திட்டமிடப்படாத ஊரடங்கு, நாட்டில் கொரோனவை பரவச் செய்து விட்டது. மோடி அரசு தன்னிறைவு பெற்றதாக கூறுகிறது.நம்மைநாம்தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். ஏனென்றால் பிரதமர் மயில்களுடன் பிஸியாக இருக்கிறார்,எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Modi ,Rahul Gandhi , Prime Minister Modi, Peacocks, Rahul Gandhi, Leap
× RELATED பிரதமர் நரேந்திர மோடியின் குற்றத்தை...