×

தெலுங்கானா எல்லையில் 100 மாவோயிஸ்டுகள் ஆயுதங்களுடன் நடமாட்டம்...!! - டிரோன் கேமரா பதிவால் போலீஸ் அதிர்ச்சி!!!

தெலுங்கானா:  தெலுங்கானா-சட்டீஸ்கர் எல்லையில் நூற்றுக்கணக்கான மாவோயிஸ்டுகள் ஒரேநேரத்தில் நதியை தாண்டி செய்வது தொடர்பான, டிரோன்  கேமரா பதிவு காட்சிகள் பொதுமக்களை மட்டுமின்றி போலீசாரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திருக்கிறது. சட்டீஸ்கர் மாநிலத்திலிருந்து தெலுங்கானா மாநிலத்திற்குள் மாவோயிஸ்டுகள் நுழைவதை தடுக்க கண்காணிப்பை காவல் துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். அதாவது, தெலுங்கானா, ஒடிசா, சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு அவ்வப்போது தகவல் கிடைத்து வந்தது. இதன் காரணமாக கடந்த 2 வாரங்களுக்கு மேலாக தொடர்ந்து போலீசார் 4 மாநிலங்களில் வனப்பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர். அவ்வாறு ஈடுபடும்போது, ஒடிசா மாநிலத்தில், மாவோயிஸ்டுகளுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 5 மாவோயிஸ்டுகள் உயிரிழந்த நிலையில், 2 போலீசாரும் உயிரிழந்தனர்.

இதனைத்தொடர்ந்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், நேற்று சட்டீஸ்கர் மற்றும் தெலுங்கானா மாநில எல்லையில் உள்ள சுக்மா என்ற இடத்தில் போலீசார் ட்ரோன் கேமரா மூலம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டபோது, 100க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் நதியை கடந்து செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது. இதனையடுத்து போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர். தொடர்ந்து தெலுங்கானா போலீசாருக்கும், ஒடிசா போலீசாருக்கும் இதுகுறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சுக்மா மலைப்பகுதியில் வசிக்கும் மக்கள் யாரேனும் மாவோயிஸ்டுகள் நடமாட்டத்தை கண்டால் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமென்றும், மக்கள் பாதுக்காப்பாக இருக்க வேண்டும் என்றும் சட்டீஸ்கர் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags : Maoists ,border ,Telangana , Telangana, Maoists, weapons, drones, camera
× RELATED வயநாடு தொகுதி மக்களை...