×

ஊழியர் வீட்டில் நகை திருட்டு

திருவள்ளூர்: தொடுக்காடு கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (39). தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இவரது மகனுக்கு காயம் ஏற்பட்டதால் நேற்று காலை வீட்டை பூட்டிக் கொண்டு குடும்பத்தோடு மருத்துவமனைக்கு சென்றுவிட்டு மீண்டும் மாலை வீட்டுக்கு வந்தார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த 2 பீரோவையும் உடைத்து அதிலிருந்த 14 சவரன் நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து, புகாரின்பேரில் மப்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Employee home, jewelry, theft
× RELATED சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று...