×

புதுப்பெண் மர்ம சாவு

பட்டாபிராம்: பட்டாபிராம் அணைக்கட்டுச்சேரி பெரியார் தெருவை சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (26). கோயில் பூசாரி. இவரது மனைவி மதுஸ்ரீ (22). இவர்களுக்கு திருமணமாகி 7 மாதங்கள் ஆகிறது. நேற்று முன்தினம் மாலை மதுஸ்ரீ வீட்டின் மாடியில் காயவைத்த துணிகளை எடுக்க சென்றார். வெகு நேரமாகியும் அவர் கீழே வராததால், சந்தேகம் அடைந்த விக்னேஸ்வரன் அங்கு சென்று பார்த்தார். அப்போது, மதுஸ்ரீ மாடியில் மயங்கி விழுந்து கிடந்தார். இதனையடுத்து, அவரை மீட்டு சிகிச்சைக்காக பட்டாபிராம் உள்ள தனியார் மருத்துவமனைக்கு விக்னேஸ்வரன் கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் மது வரும் வழியிலேயே இறந்ததாக தெரிவித்தனர். தகவல் அறிந்த பட்டாபிராம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், திருமணமாகி 7 மாதங்களே ஆவதால் ஆர்டிஓ விசாரணையும் நடக்கிறது.

Tags : death ,bride , New bride, mysterious death
× RELATED நாட்டு மக்கள் மரணம் அடைந்த பிறகும் வரி...