×

கிசான் திட்டத்தில் ரூ.2.15 கோடி முறைகேடு

திருவள்ளூர்: பாரத பிரதமரின் கிசான் திட்டத்தில் பல்வேறு மாவட்டங்களில் முறைகேடுகள் நடந்தது தற்போது அம்பலமானது. இதுதொடர்பாக, பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் 6 ஆயிரத்து 500 பேர் 2 கோடியே 15 லட்சம் முறைகேடாக பயனடைந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வருவாய்த்துறை, காவல்துறை, வேளாண்மை துறை இணைந்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் இதுவரை 2 ஆயிரத்து 800 பேரிடம் இருந்து ரூ.1 கோடியே 10 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள பணத்தை திரும்ப பெறவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக என மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) வெ.முத்துசாமி தெரிவித்துள்ளார்.

Tags : Kisan scheme, Rs.2.15 crore, abuse
× RELATED சென்னையில் ரூ.1 கோடி மதிப்புள்ள ஒரு...