×

பண்ணாரி சோதனைச்சாவடியில் வாகனங்களை வழிமறித்த யானையால் பரபரப்பு

சத்தியமங்கலம் :   சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் தமிழக-கர்நாடக எல்லையில் அடர்ந்த வனப்பகுதியில் பண்ணாரி சோதனைச்சாவடி அமைந்துள்ளது. இங்கு காவல்துறை, வனத்துறை மற்றும் வட்டார போக்குவரத்து துறை சோதனைச்சாவடிகள் உள்ளன. தமிழகம்-கர்நாடக மாநிலங்களுக்கு இடையே செல்லும் வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டு பின்னர் அனுமதிக்கப்படுகின்றன. இந்நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் ஒற்றை யானை வனப்பகுதியில் இருந்து வெளியேறி பண்ணாரி சோதனைச்சாவடி பகுதியில் சாலையின் நடுவே நடமாடியது. யானையை கண்ட வாகன ஓட்டிகள் மற்றும் சோதனைச்சாவடி பணியில் இருந்த போலீசார் மற்றும் வட்டார போக்குவரத்து துறை அலுவலர்கள் அச்சமடைந்தனர்.

யானை சுமார் அரை மணி நேரம் சாலையில் நின்றபடி அங்கும் இங்கும் நடமாடியது. இதன் காரணமாக வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. இதைத்தொடர்ந்து அங்கு வன சோதனைச்சாவடியில் பணியில் இருந்த வனத்துறை ஊழியர்கள் யானையை விரட்ட முயற்சித்தும் யானை நகராமல் அப்பகுதியிலேயே முகாமிட்டது. பின்னர் சிறிது நேரம் கழித்து யானை சாலையோர வனப்பகுதிக்கு சென்றபின் வாகனங்கள் புறப்பட்டுச் சென்றன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Pannari , Security Checkpost,Elephant,satyamangalam,
× RELATED பண்ணாரி வனப்பகுதியில் உடல்நலம்...