சென்னை: சென்னை ராயப்பேட்டையில் வாட்ஸ்அப் மூலம் கஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விஜய் கணேஷ்(29), கீத்தன்(23), கருணாகரன்(34) ஆகியோரை கைது செய்து 3 பேரிடம் இருந்து 30 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார், தற்போது தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.