×

வி.கே.புரம் அருகே சிறுத்தை சிக்கியது

வி.கே.புரம் : வி.கே,புரம் அருகே கோரையார்குளத்தில் வைக்கப்பட்ட வனத்துறை கூண்டில்  சிறுத்தை சிக்கியது. நெல்லை மாவட்டம் வி.கே.புரம் அருகேயுள்ள திருப்பதியாபுரத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் வீட்டில் ஆடுகள் வளர்த்து வருகிறார். கடந்த 8ம் தேதி இவரது வீட்டில் கட்டப்பட்டிருந்த 2 ஆடுகளை சிறுத்தை கடித்து குதறியது. தகவலறிந்த வனத்துறையினர் வந்து பார்வையிட்டனர். அப்போது அட்டகாசம் செய்து வரும் சிறுத்தையை கூண்டு வைக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று கடந்த 9ம் தேதி வனத்துறையினர் கூண்டு வைத்தனர். நேற்று காலை இந்த கூண்டில் 2 வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை பிடிபட்டது. வனத்துறையினர் விரைந்து வந்து கூண்டுடன் சிறுத்தை மீட்டுச் சென்று முண்டந்துறை வனச்சரகத்திற்கு உட்பட்ட கன்னிக்கட்டி வனப்பகுதிக்குள் பத்திரமாக விட்டனர். ஏற்கனவே இப்பகுதியில் 6 சிறுத்தைகள் கூண்டில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : VKpuram , VKPuram,leopard ,leopard trapped
× RELATED வி.கே.புரம் அருகே அனுமதியின்றி டிராக்டரில் குண்டுகல் கடத்திய 3 பேர் கைது