×

குலதெய்வம் கோயிலில் ஓபிஎஸ் சிறப்பு பூஜை

திருவில்லிபுத்தூர் : குலதெய்வம் கோயிலில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பு பூஜை செய்தார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று சாமி தரிசனம் செய்வதற்காக, விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு நேற்று  வந்தார். அவரை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் வரவேற்றனர். தொடர்ந்து அவர் ஆண்டாள் சன்னதி, கோயில் வளாகத்தில் உள்ள பெரிய பெருமாள் சன்னதியில் தரிசனம் செய்தார்.

பின்னர் அங்கிருந்து திருவில்லிபுத்தூர் அருகே உள்ள செண்பகத்தோப்பு பகுதிக்கு சென்று, அங்குள்ள தனது குலதெய்வமான பேச்சியம்மன் கோயிலில் நடைபெற்ற உச்சிக்கால சிறப்பு பூஜையில் பங்கேற்று தரிசனம் செய்தார். துணை முதல்வரை திருவில்லிபுத்தூர் எம்எல்ஏ சந்திரபிரபா முத்தையா, சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் வரவேற்றனர்.

Tags : OPS ,Kuladeyvam temple , OPS, Deputy CM, Tamilnadu, O Pannerselvam
× RELATED பா.ஜ.க. கூட்டணியில் எத்தனை தொகுதிகளை ஏற்பது?-ஓ.பி.எஸ்.ஸுக்கு அதிகாரம்