×

வங்கக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வட தமிழகம் மேகமூட்டத்துடன் காணப்படும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

ஆந்திரா: ஆந்திர கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வட தமிழகம் மேகமூட்டத்துடன் காணப்படும், சில மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு எனவும் கூறியுள்ளது. நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் கூறியுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக மீண்டும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் ஆந்திராவை நோக்கி நகரக்கூடும் என கூறியுள்ளது.  

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வடதமிழகம் மேகமூட்டத்துடன் காணப்படும் என கூறியுள்ளது. இதன் காரணமாக கடலோர ஆந்திரா,தெலங்கானா மற்றும் ஒடிசாவிற்கு கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக தென் மேற்கு பருவமழை சற்று தொய்வடைந்த நிலையில் இருந்தது,இன்று உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக மீண்டும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Tamil Nadu ,Bay of Bengal: Meteorological Center Information , Bay of Bengal, Depression, Northern Tamil Nadu, Cloudy
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...