தருமபுரி: நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழந்த தருமபுரி மாணவர் ஆதித்யாவின் உடலை வாங்க மறுத்து, நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மாணவரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அரசு நல்ல முடிவை எடுக்கும் வரை உடலை வாங்க முடியாது, உடற்கூராய்வுக்கு அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளனர்.