பாட்னா:பீகாரில் லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தேசிய துணை தலைவராக இருந்த முன்னாள் மத்திய அமைச்சரான ரகுவன்ஸ் பிரசாத், கடந்த வியாழன்று கட்சியில் இருந்து விலகினார். கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளை காரணம் காட்டி கட்சியில் இருந்து விலகுவதாக லாலுவுக்கு அவர் கடிதம் எழுதினார். இதனை தொடர்ந்து, அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் இரவு முதல் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.ரகுவன்ஸ் ராஜினாமா கடிதத்தை லாலு இன்னும் ஏற்கவில்லை. சிகிச்சை முடிந்த பிறகு முடிவு செய்யலாம் என அவர் கூறியுள்ளார்.