×

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நாட்டை படுகுழியில் தள்ளிவிட்டது பாஜ: ராகுல் காந்தி ஆவேசம்

புதுடெல்லி: கொரோனாவுக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைகளை, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து விமர்சித்து வருகிறார். சரியான முறையில் மத்திய அரசு கொரோனா விவகாரத்தை கையாளவில்லை என்றும் குற்றம்சாட்டி வருகிறார். இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த வியாழன்று பேசுகையில், ‘பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, கொரோனாவுக்கு எதிராக திட்டமிட்டு போராடி வருகிறது,’ என்று குறிப்பிட்டார். இந்நிலையில், இக்கருத்தை ராகுல் காந்தி  விமர்சித்துள்ளார். இது குறித்து ராகுல் காந்தி நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘கொரோனாவுக்கு எதிரான மோடி அரசின் திட்டமிட்ட போராட்டமானது நாட்டை படுகுழியில் தள்ளியுள்ளது என தெரிவித்துள்ளார்.

1வரலாறு காணாத வகையில் உள்நாட்டு உற்பத்தியில் 24% சரிவு ஏற்பட்டுள்ளது.
2 நாடு முழுவதும் 12 கோடி வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளது.
3 நாட்டின் மீது 3.15.5 லட்சம் கோடி கூடுதல் கடன் சுமை ஏற்பட்டுள்ளது.
4 உலகளவில் அதிகபட்சமான கொரோனா பாதிப்பு, மரணங்கள் ஏற்படுகின்றன.
இவ்வாறு அவர் தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Tags : BJP ,country ,Rahul Gandhi ,Corona , To Corona, the country is in the abyss, pushed, Baja
× RELATED ஜனநாயகத்தின் மீது தொடர் தாக்குதல்...