சண்டிகர்: கடந்த 1991ம் ஆண்டு சண்டிகரில் காவல் துறை கண்காணிப்பாராகப் பணிபுரிந்து வந்தார் சுமேத் சிங் சைனி. அப்போது, அவர் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நிகழ்ந்தது. இதில் தப்பிய சைனி, பல்வாந்த் முல்தானி என்ற இன்ஜினியரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்தார். கைது நடவடிக்கைக்குப் பிறகு முல்தானி மாயமாகி விட்டார் பின்னர், பஞ்சாப் மாநில டிஜிபி.யாக சைனி பதவி உயர்வு பெற்றார். இந்நிலையில், முல்தானி விவகாரம் பற்றி அவருடைய குடும்பத்தினர் தொடர்ந்த வழக்கை விசாரித்த மொகலி மாவட்ட நீதிமன்றம், சைனி உள்ளிட்ட 6 பேர் மீது ஆள்கடத்தல், கொலை வழக்குக்ளை பதிவு செய்ய உத்தரவிட்டது. இதனால், கடந்த 3ம் தேதி சைனி தலைமறைவானார். இந்நிலையில், அவரை வரும் 25ம் தேதிக்குள் அவரை ஆஜர்படுத்தும்படி காவல்துறைக்கு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.