மேட்டுப்பாளையம்: காரமடை மேற்கு பகுதியில் கண்டியூர் புதூர் கிராமத்தில் திருமூர்த்தி என்பவரது வாழைத் தோட்டத்திற்குள் நேற்று இரவு புகுந்த மூன்று காட்டு யானைகள் 300க்கும் மேற்பட்ட வாழை மரங்களை சேதப்படுத்தின. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் யானைகள் நாசம் செய்த வாழை மரங்களை பார்வையிட்டனர். காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.