×

திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பியுள்ளதை எதிர்த்து ரிட் மனு தாக்கல்

சென்னை: திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பியுள்ளதை எதிர்த்து ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் ரிட் மனு தாக்கல் செய்துள்ளனர். சட்டசபைக்கு குட்கா கொண்டுவந்தது தொடர்பாக ஏற்கனவே அளித்த உரிமை மீறல் நோட்டீசை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

செப்டம்பர் 7ம் தேதி நடந்த உரிமை குழு கூட்டத்தில் மீண்டும் குட்கா கொண்டுவந்த பிரச்சனை பற்றி விவாதித்துள்ளனர். 2017 ஜூலை 19ல் நடந்தது குறித்து மீண்டும் சட்டமன்ற செயலாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கும் 14ம் தேதி நோட்டீசுக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சட்டமன்ற கூட்டத்தொடரில் திமுக எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பதை தடுக்கவே நோட்டீஸ் என்று புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய நோட்டீசுகளை எதிர்த்து மீண்டும் ரிட் மனு தாக்கல் செய்துள்ளதாக திமுக அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : re-sending ,DMK MLAs , DMK, infringement notice, writ petition
× RELATED முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற திமுக எம்எல்ஏக்கள்