சென்னை: தமிழகத்தில் 71 பி.எட் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்த தடை விதித்து ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பல்கலைக்கழகம் இணைப்பு அனுமதி பெறாத 13 பி.எட் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்த தடை விதித்துள்ளனர். தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தால் அங்கீகாரம் ரத்து செய்த கல்லூரிகளிலும் மாணவர் சேக்கைக்கு தடை விதிப்பு செய்யப்பட்டுள்ளது.