×

நீட் தேர்வை தைரியத்துடன் எழுதுங்கள்: மாணவர்களுக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து

சென்னை: நீட் தேர்வை தைரியத்துடன் எழுதுங்கள் என மாணவர்களுக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை:வருகிற 13ம் தேதி நீட் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் தேர்வாணையம் அறிவித்துள்ள நடைமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். அதோடு அவர்கள் அறிவுறுத்தியவாறு முன்னேற்பாட்டுடன் தேவையான பொருட்களை தேர்வு அனுமதி சீட்டு, முகக்கவசம், சானிடைசர் போன்றவைகளை தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.

கடைசி நேர பதற்றத்தையும், அவசரத்தையும் தவிர்த்தால் நன்றாக இருக்கும். தேர்வையும் நிதானமாக, வெற்றிகரமாக எழுதி முடிக்க முடியும். உங்களுக்கான பிரகாசமான எதிர்காலம் காத்துக்கொண்டு இருக்கிறது. உங்களுக்கான எதிர்காலத்தை, பாதைகளை, தேர்ந்தெடுக்கும் வாய்ப்பும், காலமும் நிறைந்துள்ளது. மனத்தில் உள்ள பயத்தை போக்கி, தைரியத்துடன் எதையும் எதிர்கொள்ளுங்கள். நீங்கள் சாதிக்கப் பிறந்தவர்கள். புதிய உலகத்தை படைக்க இருக்கும் நீங்கள் அவற்றை தனதாக்கிக் கொள்ள முயலுங்கள். வெற்றி உங்கள் கையில் தவழும். உலகம் உங்களை போற்றும். மாணவர்கள் அனைவரும் கொரோனா காலத்தில் முன்னெச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும், தைரியத்துடனும் தேர்வு எழுத வேண்டும். தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : GK Vasan , Write the NEED exam boldly: GK Vasan congratulates the students
× RELATED தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டதாக ஈரோடு...