சென்னை: மத்திய அரசால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள உள்ளாட்சி அமைப்புக்கான நிதியை வழங்க கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழகத்துக்கான நிலுவை தொகையை வழங்க கோரி வழக்கறிஞர் ஜெய்சுகின் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு ரூ.4000 கோடி நிலுவை தொகை வழங்க வேண்டும்.