சென்னை: கல்லூரி கல்வி இயக்குநராக பூர்ணசந்திரன் நியமனம் செய்யப்பட்டதற்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. பணிமூப்பில் உள்ள கீதாவை தவிர்த்து பூர்ணசந்திரனை நியமித்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். பூர்ணசந்திரன் நியமனம் தொடர்பான ஆவணம், பதில் மனுவை செப்டம்பர் 22க்குள் அளிக்க நீதிபதி பார்த்திபன் உத்தரவிட்டுள்ளார். சீனியரான தன்னை இயக்குநராக நியமிக்க கோரி திருவாரூர் திரு.வி.க அரசு கலைக்கல்லூரி முதல்வர் கீதா வழக்கு தொடர்ந்துள்ளார்.