×

காவிரி டெல்டாவில் எண்ணெய் கிணறுகளை தோண்ட ஓஎன்ஜிசிக்கான அனுமதியை 3 ஆண்டு நீட்டிக்க பரிந்துரை

சென்னை: காவிரி டெல்டாவில் எண்ணெய் கிணறுகளை தோண்ட ஓஎன்ஜிசிக்கான அனுமதியை 3 ஆண்டு நீட்டிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 24 எண்ணெய் கிணறுகளுக்கான சுற்றுச்சூழல் அனுமதியை நீட்டிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஓஎன்ஜிசி அனுமதியை நீட்டிக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக நிபுணர் மதிப்பீடு குழு பரிந்துரை செய்துள்ளது. திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்பட 24 இடத்தில் எண்ணெய் கிணறு தோண்ட 2013ல் அனுமதி தரப்பட்டது. 16 எண்ணெய் கிணறுகளை அமைத்துவிட்ட ஓஎன்ஜிசி எஞ்சிய பணிகளை முடிக்க மேலும் அவகாசம் கேட்டது.

Tags : ONGC ,Cauvery Delta , Oil Well, ONGC, Cauvery Delta
× RELATED செம்பனார்கோயில் பகுதியில் மண்வளத்தை மேம்படுத்த வயலில் ஆட்டுக்கிடை