காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள், கொரோனா தடுப்பு குறித்து முதல்வர் பழனிசாமி இன்று ஆய்வு மேற்கொள்கிறார். கொரோனா தடுப்பு பணி குறித்த ஆய்வுக் கூட்டத்தில் ஆட்சியர், அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.260.46 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்டங்களை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார். காஞ்சிபுரத்தில் ரூ.362 கோடியில் 15,910 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் பழனிசாமி வழங்குகிறார்.