சேலம்: தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு காவிரி நீர்வரத்து 10,000 கனஅடியிலிருந்து 12,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்வரத்து 8,830 கனஅடியில் இருந்து 10,045 கனஅடியாக அதிகரித்துள்ளது.