×

பைக்கிலிருந்து கீழே விழுந்து வாலிபர் பலி

பூந்தமல்லி. பூந்தமல்லியை அடுத்த மோரை கிராமம் அருணாச்சலம் நகர் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார் (25). இவரது நண்பர் பிரவீன் ராஜ் (21), இருவரும் பெயிண்டர் வேலை செய்து வந்தனர். நேற்று பிற்பகல் வேலை விஷயமாக இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை பிரவீன்ராஜ் ஓட்டினார். அசோக்குமார் பின்னால் அமர்ந்து கொண்டு சென்றார். அப்போது, சென்னீர்குப்பம்-ஆவடி சாலை, காடுவெட்டி அருகே சென்றபோது சாலையின் குறுக்கே நாய் வந்ததால் நாய் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில், அசோக்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவரை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு, பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். லேசான காயங்களுடன் பிரவீன்ராஜ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த சம்பவம் குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். போலீசாரின் விசாரணையில்,  அசோக்குமாருக்கு அவரது உறவினர் மகளுடன் இந்த மாதம் திருமணம் செய்ய நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இதற்கிடையே, கடந்த 2 தினங்களுக்கு முன்பு அவரது பாட்டி இறந்து விட்டதால், அதற்குரிய இறுதி சடங்குகள் அனைத்தும் முடித்து விட்டு அடுத்த மாதம் திருமணம் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.

Tags : walker , Bike, Valipar kills
× RELATED திகலர் பர்பிள்: விமர்சனம்